லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக தகவல் : பாகிஸ்தானில் காவலில் இருந்த புத்தாவி மாரடைப்பால் இறந்ததாக ஐநா அறிவிப்பு
Jan 12 2024 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத், லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவராக இருந்த போது புத்தாவி துணை தலைவராக இருந்தார். மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஹபீஸ் சயீத் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு லஷ்கர்-இ-தொய்பாவின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு புத்தாவிக்கு கிடைத்தது. இந்தநிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் காவலில் இருந்தபோது ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி மாரடைப்பால் இறந்ததாக ஐநா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது.