ஸ்பெயின் நாட்டில் அதிகரிக்கும் நோய்கள் - முகக்கவசம் கட்டாயம் : பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்
Jan 11 2024 9:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயின் நாட்டில் காய்ச்சல், கொரோனா மற்றும் பிற சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுகாதார வசதிகள் மற்றும் மருந்தகங்களில் முகக்கவசங்களின் பயன்பாடு கட்டாயமாக்குவது கடந்த 6 மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழலில் ஸ்பெயின் நாட்டின் வெலெனிக்கா, கடலொனியா, முர்சியா ஆகிய மாகாணங்களில் பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.