உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை ஒப்புக்கொண்டது ஈரான் - தவறுதலாக நடந்த சம்பவம் என விளக்கம்
Jan 11 2020 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் நாட்டு விமானத்தை தற்செயலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
ஈரான் வான் எல்லையில் பறந்த உக்ரைன் நாட்டின் போயிங் 737 ரக விமானம் கீழே விழுந்து வெடித்ததில் 176 பேர் உயிரிழந்தனர். முதலில் விமானம் விபத்துக்குள்ளானது என கூறப்பட்ட நிலையில், ஈரான் நடத்திய தாக்குதலிலேயே விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் குற்றம் சாட்டின. இந்த குற்றச்சாட்டை ஈரான் முதலில் மறுத்து வந்த நிலையில் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. விமான விபத்துக்கு மனித பிழையே காரணம் என்றும் உக்ரைன் விமானத்தை தற்செயலாக சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.