ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் சுவாச கோளாறு - பொதுமக்கள் போராட்டம்
Dec 12 2019 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிட்னி நகரில் பருவநிலை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாகாணங்களில், கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தொடரும் காட்டுத்தீயால், 20 லட்சம் ஏக்கர் மரங்கள் சேதமடைந்துள்ளன. சிட்னி நகரம் முழுவதும் புகையால் சூழப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, காட்டுத்தீயை அணைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முகமூடி அணிந்து, சிட்னி நகர வீதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.