பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்றனர் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் தம்பதியர் - பாரம்பரிய வேட்டி சேலையில் பரிசை பெற்றனர்
Dec 11 2019 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி, எஸ்தர் தம்பதியர் பாரம்பரிய வேட்டி சேலையில் நோபல் பரிசு பெற்றுக்கொண்டனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த, பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி, எஸ்தர் டுப்லோ ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசளிப்பு விழா ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹாம் கன்சர்ட் ஹாலில் நடைபெற்றது. பரிசு பெற வந்த அபிஜித் மற்றும் அவரது மனைவி இந்திய பாரம்பரிய முறையில் உடையணிந்து வந்திருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.