ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதே பிரதான பணி : பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ராணி இரண்டாம் எலிசபெத் உரை
Oct 14 2019 7:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதே அரசின் பிரதான பணி என ராணி இரண்டாம் எலிசபெத் அறிவித்துள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய ராணி இரண்டாம் எலிசபெத், இம்மாதம் 31ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதே அரசின் முன்னுரிமை என தனது உரையை துவக்கினார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தகத்தின் அடிப்படையிலான புதிய கூட்டாண்மை ஒன்றை அமைத்துக்கொள்ள பிரிட்டன் விரும்புவதாக குறிப்பிட்ட அவர், புலம்பெயர்தல், குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்குதல் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரையாற்றினார்.