அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா : புதிய அமைச்சரை அடுத்த வாரம் அறிவிப்பேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்
Oct 13 2019 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கெவின் மெக்காலினன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கெவின் மெக்காலினன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தான், இந்த பதவியில் கெவின் மெக்காலினன் நியமிக்கப்பட்டார். சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு உதவியாக இருந்தார். இருப்பினும், அண்மைக்காலமாக அதிபர் டிரம்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பதவி விலகி உள்ளார்.
கெவின் மெக்காலினன் அவரது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவதால் பதவி விலகி இருக்கிறார் என்றும், புதிய அமைச்சரை அடுத்த வாரம் அறிவிப்பேன் என்றும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.