சிக்கன நடவடிக்கையாக ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் 10 ஆயிரம் வேலைகள் குறைக்கப்படும் என்ற அறிவிப்பால் ஊழியர்கள் அச்சம்
Oct 9 2019 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிக்கன நடவடிக்கையாக ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் 10 ஆயிரம் வேலைகள் குறைக்கப்படும் என்ற அறிவிப்பால் அந்நிறுவன ஊழியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இங்கிலாந்தை சேர்ந்த எச்எஸ்பிசி வங்கி உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படுகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலையால் இந்நிறுவனம் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் இந்நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி நோயல் க்வின் வங்கியின் செலவுகளை குறைக்க குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன் ஒரு நடவடிக்கையாக ஹெச்.எஸ்.பிசி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் 10,000 வேலைகள் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக அதிக ஊதியம் வாங்கும் ஊழியர்களை முதலில் பணி நீக்கம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வங்கியின் மூன்றாவது காலாண்டு நிதி அறிக்கையை வெளியிடும் போது செலவு குறைப்பு மற்றூம் ஆட்குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்பதால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள ஹெச்.எஸ்.பி.சி வங்கி ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.