சீனாவில் நிலவும் கடும் பனிப்பொழிவு :பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Dec 31 2018 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, பல்வேறு மாகாணங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கிழக்கு, தென்மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மைனஸ் 3 டிகிரி அளவுக்கு குளிர் நிலவுவதோடு, தொடர்ந்து பனிப்பொழிவும் காணப்படுகிறது. இதனால், வீடுகள், சாலைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களின் மீது 10 சென்டி மீட்டர் அளவுக்கு பனிக்கட்டிகள் தேங்கியுள்ளன. காணும் இடங்கள் எல்லாம் வெண்பட்டு போர்த்தியது போல பனியால் மூடப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களைத் தவிர்க்க, முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பனிக்கட்டிகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய Hubei மாகாணத்தில் உள்ள விமான நிலையங்களில் விமான சேவைகள் முடங்கியுள்ளன. மேலும், 2-ஆம் கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.