இலங்கையில் 30 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை - ராணுவம், காவல்துறையை மீண்டும் தன்வசப்படுத்தினார் அதிபர் மைத்ரிபால சிறிசேன
Dec 20 2018 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையில் 30 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை அதிபர் சிறிசேன அறிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமே சிங்கே பரிந்துரை செய்தவர்களுக்கு அமைச்சர் பதவி ஒதுக்காமல் புறக்கணித்துள்ளார்.
இலங்கையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமராக, அதிபர் சிறிசேன அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இந்த நடவடிக்கையில், சிறிசேனாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, 30 புதிய உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இதில், காவல்துறை, பாதுகாப்புத்துறை போன்றவற்றை அவர் மீண்டும் தம் வசமே வைத்துக் கொண்டுள்ளார். அதேவேளையில் அமைச்சர் பதவிக்காக ரணில் விக்ரமசிங்கே பரிந்துரை செய்த 2 பேரை சிறிசேனா நிரகாரித்துள்ளார்.