பருவ நிலை தொடர்பாக உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் ஐ.நா.சபை மாநாடு
Dec 4 2018 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போலந்து நாட்டில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா.சபை மாநாட்டில், பருவ நிலை தொடர்பாக உலக நாட்டு தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
உலக வெப்பமயமாதல் சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனவே இதனை 2 டிகிரி செல்சியசுக்கும் கீழே குறைக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து இலக்கு நிர்ணயித்தன. இது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாரீசில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, போலந்தின் Katowice நகரில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், சுமார் 200 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, பருவ நிலை தொடர்பான பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டனர். வரும் 14-ஆம் தேதி வரை இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.