பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் உள்ளிட்ட மூவரின் சிறை தண்டனை ரத்து - விடுதலை செய்ய இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 19 2018 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊழல் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோரின் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களை விடுதலை செய்ய இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப், பனாமா கேட் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கினார். அவரது பிரதமர் பதவியை பறித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், ஷெரிஃபிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதேபோல் அவரது மகள் மரியம் நவாசுக்கு, 7 ஆண்டுகள், மருமகன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மூவரும் அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறை தண்டனைக்கு எதிராக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்ற போது, நவாஸ் ஷெரிப், மரியம் மற்றும் முன்னாள் ராணுவ கேப்டன் சப்தார் ஆகியோரின் சிறைத் தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களை விடுதலை செய்யவும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00