சைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து : 19 பேர் உயிரிழப்பு - 103 பேர் பத்திரமாக மீட்பு

Jul 19 2018 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

சைப்ரஸ் கடற்பகுதியில், அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர்.

ஈராக், சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தான படகு பயணத்தின் மூலம் அகதிகளாக மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைவது தொடர்கதையாக உள்ளது. இவ்வாறான பயணத்தின்போது, அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதால் பல நேரங்களில் நடுக்கடலில் படகு விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், சைப்ரஸ் நாட்டின் வடக்கு கடற்பகுதியில், சுமார் 150 பேருடன் பயணித்த படகு மூழ்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். 103 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போன 25 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விபத்தில் சிக்கிய அகதிகள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00