மீன்களுடன் பேசும் ரோபோ - சுவிட்சர்லாந்து நிறுவனம் தயாரிப்பு
Nov 12 2017 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுவிட்சர்லாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மீன்களிடம் பேசும் ரோபோவை கண்டு பிடித்துள்ளது. ஜெனீவாவில் இயங்கும் அந்த நிறுவனம் பல வருட ஆராய்ச்சிக்கு பின் இதை நிகழ்த்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மீன்களிடம் பேசும் ரோபோவை கண்டு பிடித்துள்ளது. இது மீன்களை எளிதில் ஏமாற்றும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் சூரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார்கள் உள்ளன. அவை மீன்களை நீந்தும் திறன் படைத்தவை. மேலும் அதில் உள்ள டிரான்ஸ் மீட்டர் நமக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கும். இந்த ரோபோ கடலுக்குள் சென்று நாம் தெரிவிக்கும் தகவல்களை மீன்களுக்கு புரியும்படி பேசும் திறன் படைத்தவை. அதன் மூலம் மீன்களை அதன் வழியில் இருந்து மாற்றவும், தேவையான இடங்களில் நிறைய மீன்களை ஒன்றாக சேர்க்கவும் முடியும். இது கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் பெரிய மைக்கல்லாக இருக்கும் என கருதப்படுகிறது. இது இன்னும் சில நாட்களில் பயன்பாட்டுக்கு வருகிறது. இதை சுவிட்சர்லாந்தை சேர்ந்த எல்.எஸ்.ஆர்.ஓ. நிறுவன விஞ்ஞானிகள் கடந்த 5 ஆண்டுகளாக முயற்சி செய்து உருவாக்கியுள்ளனர்.