ஃபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு அதிரடி நடவடிக்கையில் 26 பேர் கொல்லப்பட்டனர்
Aug 18 2017 9:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஃபிலிப்பைன்ஸ் அதிபர், ரோட்ரிகோ ட்யூட்டர்ஸ், போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வாதிகார முறையில் கட்டவிழ்த்து விட்டுள்ளார். போதைப்பொருள் சம்பந்தமான அனைத்துக் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளதால் ஃபிலிப்பைன்ஸில் ஆயிரக்கணக்கானோர் போலீசாரால் கொல்லப்பட்டு வருகின்றனர். தலைநகர் மணிலாவில் நேற்று நடைபெற்ற அதிரடி நடவடிக்கையில் சுமார் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்று முன்தினம் Bulacan மாகாணத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், 32 பேர் கொல்லப்பட்டனர். அதிபர் ட்யூட்டர்ஸ் போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிலிப்பைன்ஸின் துயரத்திற்கு விடுதலை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2016ம் ஆண்டு தொடக்கம் முதல் ஜூலை வரை போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் 3,400 பேர் வரை கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.