லண்டனில் இப்தார் நோன்பு முடித்துவிட்டு வீடு திரும்பிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் : ஒருவர் கைது - பிரதமர் தெரசா கடும் கண்டனம்

Jun 19 2017 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

லண்டனில் இப்தார் நோன்பு முடித்துவிட்டு வீடு திரும்பிய இஸ்லாமியர்கள் மீது வாகனம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள ஃபின்ஸ்பரி பார்க்கில் இஸ்லாமிய மக்கள் ஏராளமானோர் நோன்பு முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது திடீரென அவ்வழியாக வந்த வாகனம் வேகமாக மோதியது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வேண்டுமென்றே இஸ்லாமியர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள இஸ்லாமிய கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு ஆற்றல் வாய்ந்த தீவிரவாத தாக்குதல் என்றும், இதைக்கேட்டு தாம் மிகுந்த அதிர்ச்சியடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00