சீனாவில் அடுக்குமாடி கட்டட ஜன்னலில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தையை இரண்டு இளைஞர்கள் துணிச்சலுடன் மீட்டனர்
Feb 23 2017 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் அடுக்குமாடி கட்டட ஜன்னலில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தையை இரண்டு இளைஞர்கள் துணிச்சலுடன் மீட்டனர். அவர்களது துணிவை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
சீனாவின் Meizhou என்ற இடத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 3-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஒன்று திடீரென ஜன்னலின் இடுக்கில் மாட்டிக்கொண்டது. அதிலிருந்து வெளியே வரமுடியாமல் அந்தக் குழந்தை உயிருக்கு போராடியது. ஜன்னலின் வெளிப்புறத்தில் குழந்தையின் உடலும் ஜன்னல் கம்பிக்கு உள்ளே தலையும் சிக்கிக்கொண்டதால் குழந்தை அழுது துடித்தது. குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்ட இளைஞர்கள் இருவர், அருகில் இருந்த கட்டடத்தின் வழியாக துணிச்சலுடன் ஏறிவந்து, ஜன்னலில் சிக்கிக்கொண்ட குழந்தையை காப்பாற்றினர். இளைஞர்களின் இந்த சாதூர்யமான செயலை அனைவரும் பாராட்டினர்.