அமெரிக்காவின் சான்ஆண்டனியோ நகரில் கடும் புயல் : சுமார் 25 ஆயிரம் வீடுகள் கடுமையாக சேதம்
Feb 21 2017 10:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் சான்ஆண்டனியோ நகரில் வீசிய கடும் புயலில், சுமார் 25 ஆயிரம் வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆன்டனியோ நகரில், வீசிய கடும் புயல் மற்றும் மழையால் சுமார் 25 ஆயிரம் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன. வடக்கு புறநகர் பகுதியில் உள்ள நூறு வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது. டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்ததால், மின்சாரம் தடைபட்டுள்ளது. புயலின் போது சில இடங்களில் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. வீடுகளின் கூரைகள் காற்றின் வேகத்தில் சிக்கி கடுமையாக சேதமடைந்துள்ளன. பெரும்பாலான வாகனங்கள் சாலைகளில் தூக்கி எறியப்பட்டுள்ளன. புயலில் சிக்கி 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மிஸிஸிபியின் கிழக்கு பள்ளத்தாக்கு பகுதியை கடந்து டென்னஸ்ஸி பகுதி வரை செல்லும் என டெக்சாஸ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.