அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் வாஷிங்டன் D.C. நோக்கி பேரணி
Jan 19 2017 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் வாஷிங்டன் D.C. நோக்கி பேரணியாகச் சென்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, பெண்களுக்கு எதிராகவும், வெளிநாட்டினர் குடியேற்றம் குறித்தும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். மேலும் ஒபாமா கொண்டு வந்த சுகாதார சீர்திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும், மெக்சிகோ எல்லையில் நீண்ட சுவர் கட்டப்பட வேண்டும் என்பன போன்ற சர்ச்சையான பேச்சுக்களால் மிகுந்த விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டார். இதனால் அமெரிக்க மக்கள் பலர் அவருக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மைக்பென்ஸ் ஆகியோர் பதவியேற்பதற்கு முன்னர் தடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வாஷிங்டன்னில் அமைந்துள்ள கேபிடல் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். மெக்பெர்சன் சதுக்கத்தில் தொடங்கிய இப்பேரணியில், ட்ரம்ப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபராக நாளை முறைப்படி பதவியேற்க உள்ள ட்ரம்ப்புக்கு எதிராக வாஷிங்டன் D.C. மற்றும் வெள்ளைமாளிகை அருகே 9 லட்சத்திற்கும் அதிகமானோர் நாளை கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.