மெக்சிகோவில் சுற்றுலா நகரமான கேன்கன் நகரில் அரசு அலுவலகக் கட்டடத்தின் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் : 3 பேர் கொல்லப்பட்டனர்
Jan 18 2017 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மெக்சிகோவில், சுற்றுலா நகரமான Cancun நகரில் உள்ள அரசு அலுவலகக் கட்டடத்தின் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
மெக்சிகோ நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திவருகின்றன. அந்நாட்டின் கடற்கரையோர சுற்றுலா நகரமான Cancun நகரில், அரசு கட்டடத்தின் மீது, மர்ம ஒருவர் நேற்று திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை சுட்டுக் கொன்றனர். மேலும் 3 பேரை கைது செய்தனர். இந்த மோதல் காரணமாக, அருகேயுள்ள சூப்பர் மார்க்கெட் உடனடியாக மூடப்பட்டு, அங்கிருந்த மக்களை போலீசார் வெளியேற்றினர். மெக்சிகோவில் நேற்றுமுன்தினமும், இந்த இடத்திற்கு அருகேயுள்ள மற்றொரு சுற்றுலா தலத்தில், இசை நிகழ்ச்சியின்போது, மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.