இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 97-ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்
Dec 7 2016 9:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97-ஆக உயர்ந்தது.
வடக்கு சுமத்ரா அருகே, அசே மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி ஐந்தாக பதிவான இந்த நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால், பீதியடைந்த மக்கள், சாலைகளில் தஞ்சமடைந்தனர். எனினும், சில இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கடைகள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97-ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரை மணி நேரத்தில் இடைவெளியில், 5 முறை நில நடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனினும், இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.