இந்தோனேசியாவில் 16 பேருடன் சென்ற காவல் துறைக்கு சொந்தமான விமானம் நடுக்கடலில் மாயம்
Dec 3 2016 7:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவில் 16 பேருடன் சென்றகாவல் துறைக்கு சொந்தமான விமானம் நடுக்கடலில் மாயமானது.
இந்தோனேசியா காவல் துறைக்கு சொந்தமான விமானம் ஒன்று சுமத்ரா தீவிற்கு அருகேயுள்ள பாங்கா தீவிலிருந்து 16 பேருடன்இன்று காலை புறப்பட்டு சென்றது. சிங்கப்பூர் அருகே சென்றபோது நடுக்கடலில் மாயமானது. புறப்பட்ட 50 நிமிடங்களில் விமானத்திலிருந்து எவ்வித சிக்னலும் கிடைக்காமல் போனது. இந்த விமானத்தில் விமானி உட்பட ஐந்து பணியாளர்கள் மற்றும் காவல் துறையயைச் சேர்ந்த16 பேர் பயணம் செய்தனர். காணாமல் போன விமானத்தை மென்சனாக் மற்றும் செண்பகா கடற்பகுதிகளில் தேடி வருவதாக அந்நாட்டு மிட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.