பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அதிபர் Francois Hollande திட்டவட்டம்
Dec 2 2016 9:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரான்ஸ் அதிபர் தேர்தலில், மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அதிபர் Francois Hollande திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பாளர் தேர்வு, நடைபெற்று வருகிறது. கன்சர்வேடிவ் கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் Francois Fillon மற்றும் சோசலிஸ்ட் கட்சி சார்பில் Marine Le Pen ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஆனால், சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் Francois Hollande போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால், சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் தேர்வில் குளறுபடியும், சிக்கல்களும் உருவானது.
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என, Francois Hollande திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதன்மூலம், சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் தேர்வுக்கான குழப்பம் முடிவுக்கு வந்தது. பிரான்ஸ் அதிபர் தேர்தலில், பதவியில் இருக்கும் ஒருவர், போட்டியிடாமல் விலகுவது இதுவே முதல் முறையாகும்.