ஜப்பானில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு - 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகளை அழிக்க அந்நாட்டு அரசு முடிவு

Nov 30 2016 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து பண்ணைகளில் வளர்க்கப்படும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகளை அழிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

ஜப்பான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள கோழி மற்றும் வாத்துப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்கு மேற்கொண்ட பரிசோதனையில், அந்தப் பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு H5 வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, Niigata மாவட்ட பண்ணைகளில் உள்ள 3 லட்சத்து 20 ஆயிரம் கோழிகளையும், Aomori மாவட்ட பண்ணைகளில் உள்ள 16 ஆயிரத்து 500 வாத்துகளையும் அழிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணி தொடங்கியது. மேலும், இந்த மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து, கோழி மற்றும் வாத்துகளை இதர இடங்களுக்குக் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் வேறு இடங்களுக்குப் பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானில், இரண்டு ஆண்டுகள் கழித்து பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது தற்போதுதான் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00