ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதியில் மீண்டும் தாக்குதல் நடைபெறக் கூடும் என்ற அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
Oct 26 2016 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதியில் மீண்டும் தாக்குதல் நடைபெறக் கூடும் என்ற அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
ஈராக்கில், ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றிய பல பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசுப் படையினர் ஈடுபட்டு வருவதை அடுத்து, Mosul பகுதியைச் சுற்றிலும் 90-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மீட்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான Topzawa-என்ற இடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் கிராமத்தை விட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர். நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைவதற்காக அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் மீண்டும்இப்பகுதியில் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாகவே, இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.