மொசூல் நகரை கைப்பற்ற ஈராக் படைகள் உச்சகட்ட சண்டை - கிர்குக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் 48 பேர் பலி
Oct 23 2016 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையிடமாக உள்ள Mosul நகரை கைப்பற்ற ஈராக் படைகள் உச்சகட்ட சண்டையில் ஈடுபட்டுள்ளன. Kirkuk நகரை கைப்பற்ற நடந்த சண்டையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் 48 பேர் கொல்லப்பட்டதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈராக், சிரியா நாடுகளில் அரசுக்கு எதிராக போர் நடத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள Mosul நகரை மீட்க ஈராக் ராணுவத்தினரும், குர்திஷ் படையினரும் கடும்
சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சண்டையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
இதனிடையே ஈராக்கில் அதிகளவில் எண்னெய் உற்பத்தி செய்யப்படும் Kirkuk நகரை கைப்பற்ற நடைபெற்ற சண்டையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொல்லப்பட்டதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம், ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடியாக நடத்திய வான்வழி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், ஈராக் படைவீரர்கள் உள்பட 46 பேர் பலியானதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mosul நகருக்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த மோதல் நகரின் மையப்பகுதியை அடையும் போது பெரிய எண்ணிக்கையிலான மக்கள் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.