வாஷிங்டன் வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலியான பரிதாபம் - காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Sep 24 2016 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் வாஷிங்டன் நகர வணிக வளாகத்தில் இன்று நிகழ்த்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகி விட்டன. புத்தகப்பை தூக்கும் மாணவர்களும் துப்பாக்கிகளைக் கையிலேந்துவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள Cascade வணிக வளாகத்தில் இன்று, மர்ம நபர் ஒருவர், திடீரென அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பியோடினார். இந்த துப்பாக்கிச் சூட்டில், 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். திடீரென நிகழ்ந்த இந்த சம்பவத்தால், பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர்.

இச்சம்பவத்தையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதோடு, வணிக வளாகம் உடனடியாக மூடப்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவின் மின்னசோட்டா பகுதியில், வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர் 9 பேரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் நிகழ்ந்த ஒருவார காலத்திற்குள், இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00