பாகிஸ்தானில் மலைப்பகுதி சாலையில் சென்ற மினி பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 23 பேர் பலி
Sep 24 2016 11:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் மலைப்பகுதி சாலையில் சென்ற மினி பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 23 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடங்கிய Muzaffarabad-க்கு வடக்கே நவ்சேரி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த மினி பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் ஆற்றில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 23 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தின் பாகங்களையும், உயிருக்குப் போராடிய 3 பேரையும் மீட்புக் குழுவினர் மீட்டனர். மலைப்பகுதி என்பதால், மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.