70 மீட்டர் உயர கிரேன் மீது ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல் - நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்பு
Sep 22 2016 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் 70 மீட்டர் உயர கிரேன் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சீனாவின் Guizhou மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் கட்டுமான நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். வழக்கம் போல் இன்றும் பணிக்குச் சென்ற அந்த பெண், நிலுவையில் உள்ள ஊதியத்தொகையை, நிறுவன மேலாளரிடம் கேட்டுள்ளார். ஆனால், மேலாளர் ஊதியத்தை தர மறுத்ததால், மனமுடைந்த அந்த பெண், கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்டிருந்த 70 மீட்டர் உயர கிரேன் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி, அந்த பெண்ணை உயிருடன் மீட்டனர்.