இந்தோனேஷியாவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 20 பேர் பலி : 6 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
Sep 22 2016 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேஷியாவின் ஜாவா மாகாணத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். 6 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் மேற்கில் உள்ள ஜாவா மாகாணத்தில் கனமழை காரணமாக Cimanuk ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, Garut நகர் உள்பட 6 மாவட்டங்களின் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அவர்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக 20 பேர் உயிரிழந்தனர்.
ஜாவா மாகாணத்தைச் சேர்ந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அங்குள்ள மருத்துவமனையிலும் வெள்ளம் சூழ்ந்ததால் சிகிச்சைபெறுவோரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்துவரப்பட்ட வாகனங்கள் குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன. வெள்ளத்தால் ஏராளமான வீடுகளும் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.