கோஸ்ட்டாரிக்கா நாட்டில் உள்ள Turrialba எரிமலை வெடித்துச் சிதறி, சாம்பலை வெளியேற்றி வருவதால், விமான சேவை முடங்கியது : ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி
Sep 21 2016 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோஸ்ட்டாரிக்கா நாட்டில் உள்ள Turrialba எரிமலை வெடித்துச் சிதறி, சாம்பலை வெளியேற்றி வருவதால், விமான சேவை முடங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கோஸ்ட்டாரிக்கா நாட்டில் உள்ள Turrialba எரிமலையிலிருந்து வெப்பம் மிகுந்த வாயும், சாம்பலும் கடும் சீற்றத்துடன் வெளியேறி வருகின்றன. எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் சுமார் 4 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கும் மேலே எழுந்தது. மேலும், சாம்பல் பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் படர்ந்ததால் தலைநகர் அப்பகுதியில் வாழும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எரிமலையிலிருந்து வெளியேற்றப்பட்ட சாம்பல் காரணமாக விமானப் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 68 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், விமான நிலையத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.