பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிகழும் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா கவலை
Aug 24 2016 7:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிகழும் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அங்கு வாழும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மேலும் அங்கு சர்வதேச விதிமுறைகளை மீறி சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கான வழியையும் அமைக்கவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களும் உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, பல ஆண்டுகளாக நீடித்து வரும் மனித உரிமை பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என பாகிஸ்தானிடம் வலியுறுத்தியுள்ளது. இதே நிலை தொடர்வதைத் தடுக்க, சரியான அரசியல் செயல்முறை மூலம் தீர்வு காண முடியும் என அமெரிக்க செய்தித் தொடர்பாளர் Mark Toner கூறியுள்ளார்.