சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வடகொரியா, மீண்டும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல்
Aug 23 2016 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.
வடகிழக்கு ஆசிய நாடுகளான தென்கொரியாவும், வடகொரியாவும் தங்களது ஆயுத பலத்தை நிலைநாட்ட பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.
அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இந்நிலையில், சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வடகொரியா, மீண்டும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.