அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய பேரணி : அவரை எதிர்த்த ஆர்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு
May 27 2016 7:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் Donald Trump நடத்திய பேரணியில், அவரை எதிர்த்த ஆர்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், அந்நாட்டு குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் Donald Trump- தனது ஆதரவாளர்களுடன் கலிஃபோர்னியாவில் உள்ள Anaheim பேரணி நடத்தினார். அப்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க, போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் அப்பபுறப்படுத்தினர். அதிபர் வேட்பாளராக போட்டியிடும் Donald Trump-நேற்றுவரை, ஆயிரத்து 238 வாக்குகளைப் பெற்றுள்ளதால், அவர் குடியரசுக் கட்சியின் அதிகராகப் பூர்வ வேட்பாளராக போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.