ஈராக்கில் ஃபுல்லுஜா நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்ற ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல்

May 26 2016 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக்கின் தலைநகர் அருகே அமைந்துள்ள Falluja நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்ற அவர்களின் நிலைகள் மீது ஈராக் ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பக்கபலமாக ஷியா பிரிவினர் செயல்பட்டு வருகின்றனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆக்கிரமித்து, தனி இஸ்லாமிய நாடாக அறிவித்து ஆட்சி நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் தங்களின் ஆதிக்கப்பகுதியை விரிவுப்படுத்தும் நோக்கில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுடன் சேர்ந்து ஈராக் ராணுவம் செயல்பட்டு வருகிறது. ஈராக்கின் தலைநகரான பாக்தாத் அருகே அமைந்துள்ள Falluja நகரில் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது, ஈராக் ராணுவம் கடந்த 3 நாட்களாக பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேசமயம் வீரர்கள் Falluja நகருக்கு அருகே அமைந்துள்ள Khalidiya கிராமத்தை நோக்கி முன்னேறியுள்ளனர். ஈராக் ராணுவத்தினருக்கு ஆதரவாக ஷியா பிரிவினரின் Hashid Shaabi அமைப்பைச் சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஈராக் ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐ.எஸ். தீவிரவாதிகள் பின்வாங்கி வருவதாக தாக்குதலுக்கு தலைமையேற்று நடத்தி வரும் ஈராக் ராணுவ தளபதி அப்துல் அமிர் அல்-ஷிமாரி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00