ஜப்பானில் ஜி-7 மாநாடு இன்று கூடுகிறது - பயங்கரவாதம், அகதிகள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை
May 26 2016 6:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானில் இன்று தொடங்கவுள்ள ஜி-7 மாநாட்டில், பயங்கரவாதம், அகதிகள் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜி-7 மாநாடு நடைபெறுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள இந்த மாநாட்டில், உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் பொருளாதார பிரச்னைகள், பயங்கரவாதம் மற்றும் அகதிகள் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தென் சீனக்கடலில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் ஜி7 மாநாட்டுக்காக, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.