சீனாவில், சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு கடும் புழுதிப் புயல் - பெரும் சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள்
May 26 2016 6:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் வடக்குப் பகுதியில், சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு கடுமையான புழுதிப் புயல் வீசியதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சீனாவின் வடக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள Ulanqab நகரம் மங்கோலியர்களின் தன்னாட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் கடுமையான புழுதிப் புயல் வீசியது. சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு வீசிய புயலால், பொதுமக்களின் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரம் தடைபட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் ஒரு சில இடங்களில் விபத்துகளும் நிகழ்ந்தன. 40 நிமிடங்கள் வீசிய இந்த புழுதிப் புயல் காரணமாக உள்ளூர்வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர்.