ஆப்ரிக்க நாடான கேமரூனில் தற்கொலைப்படை தாக்குதல் - 10 பேர் உடல் சிதறி பலி

Nov 23 2015 8:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆப்பிரிக்க நாடான கேமரூனில் நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தற்கொலைப்படைத் தாக்குதலில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, நைஜர், சாத், கேமரூன் உள்ளிட்ட நாடுகளில் போகோஹராம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவ்வப்போது பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தி, தீவிரவாதத் தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில், கேமரூனின் போட்டோகோல் நகரில் நிக்யூ கிராமம் அருகே 3 பெண் தீவிரவாதிகள் உட்பட 4 பேர் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தினர். தங்கள் உடல்களில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், அப்பாவி கிராம மக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை எந்த தீவிரவாத அமைப்பு நடத்தியது என்பது இதுவரை தெரியாத நிலையில், போகோஹராம் தீவிரவாதிகளே இதனை நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00