மியான்மரில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு - 100-க்கும் மேற்பட்டோர் பலி - ஏராளமானோர் காணாமல் போனதாக தகவல்
Nov 23 2015 8:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மியான்மர் நாட்டில் நிகழ்ந்த கடுமையான நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மரின் வடக்கே உள்ள Kachin பகுதியில் அமைந்துள்ள Jade சுரங்கத்தில் ஏராளமானோர் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு மற்றும் தீயணைப்புப் படையினர். 80 சடலங்களை மீட்டனர். தொடர்ந்து, காணாமல் போன பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்த சுரங்கத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு அரியவகை மணிகற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இச்சம்பவம் மியான்மர் நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து ஏராமான கிராம மக்கள் இந்த சுரங்கத்தில் பல வருடங்களாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.