ஜப்பானின் தென்மேற்கு கடற்கரைப் பகுதிகளில் நிலநடுக்கம் - கடலோரப் பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை
Nov 14 2015 7:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானின் தென்மேற்கு கடற்கரைப் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில், ரிக்டர் அளவில் 7-ஆக பதிவான, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு கடற்கரையில் உள்ள ககோஷிமா மற்றும் சுட்சுனான் தீவுகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரையோர பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.