மலேசியாவில் காட்டுத் தீயினால் உருவாகியுள்ள புகை மண்டலம் காரணமாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் சுவாசக் கோளாறால் பாதிப்பு
Oct 7 2015 7:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மலேசியாவில் காட்டுத் தீயினால் உருவாகியுள்ள புகை மண்டலம் காரணமாக, ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர், சுவாசக் கோளாறு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். புகை பாதிப்பில் இருந்து, குழந்தைகளை காப்பாற்ற ஆளுனர் அலுவலக கட்டடம் புகலிடமாக மாறியுள்ளது.
இந்தோனேஷியாவில் சுமித்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் சாகுபடி நிலக் கழிவுகள் எரிக்கப்பட்டதை அடுத்து உருவான காட்டுத் தீயினால் புகை மண்டலம் உருவாகி, காற்றின் மாசு அளவு அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நீடித்துவரும் இந்த பிரச்சனையால் இந்தோனேஷியா மற்றும் இன்றி, பக்கத்து நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இந்தோனேஷியாவில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர், சுவாசக் கோளாறு பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளனர். அங்குள்ள Pekanbaru நகரில் காற்றின் மாசு அளவு அபாய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, தற்காலிக ஏற்பாடாக, அங்குள்ள ஆளுனர் மாளிகையில் உள்ளிட்ட அரசு அலுவலக கட்டடங்களுக்கு குழந்தைகள் கொண்டு செல்லப்பட்டு, குளிர் சாதன அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
இந்தோனேஷியாவில் உருவாகியுள்ள புகை மண்டலம், பக்கத்து நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலும் பெரும் சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளது. மலேசியாவில் பெரும்பாலான பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் காற்றின் தரம், வழக்கத்தைவிட குறைந்து காணப்படுவதாக அந்நாட்டு தேசிய சுற்றுச் சூழல் ஏஜென்சி அறிவித்துள்ளது. இப்பிரச்சனை காரணமாக, சிங்கப்பூரில் கடந்த 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்த நீச்சலுக்கான உலகக் கோப்பை தொடரின் இறுதிச் சுற்றின் முதல் போட்டி ரத்து செய்யப்பட்டது.