சாலையோர ஓவியவர்களுக்காக நார்வே நாட்டில் நடைபெற்ற கலை விழா - உலகின் மிகப் பெரிய சுவர் ஓவியத்தை உருவாக்கி கலைஞர்கள் சாதனை
Sep 10 2015 7:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நார்வே நாட்டில் சாலையோர ஓவியக் கலைஞர்களுக்காக நடைபெற்ற கலை விழாவில் உலகின் மிகப் பெரிய சுவர் ஓவியம் வரைந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டில் சாலையோர ஓவியக் கலைஞர்களுக்காக Nuart Street என்ற திருவிழா, கோலாகலமாக நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஃபிரான்ஸ் நாட்டு கலைஞர்களான எல்லா மற்றும் பிட் இருவரும் சேர்ந்து வரைந்த "Lilith and Olaf" என்ற ஓவியம் பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. நார்வேயில் உள்ள தொழிற்சாலைக் கட்டிடங்களுக்கு மேலாக வரையப்பட்ட இந்த ஓவியம், 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தீட்டப்பட்டது. இளம்பெண் தூங்குவது போன்ற இந்த அழகு ஓவியத்தை போட்டி ஏற்பாட்டாளர்கள் விமானத்தில் பறந்து முழுமையாக பார்வையிட்டனர். இந்த ஓவியமே உலகின் மிகப்பெரிய சுவர் ஓவியம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.