கடும் புயலுக்கிடையே சிக்கிக்கொண்ட போயிங் விமானம் - விமானியின் சாதுர்யத்தால் பத்திரமாக தரையிறக்கம்
Jul 28 2015 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசியா ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங்- 777 விமானம், கடும் புயலுக்கு இடையே சிக்கிக்கொண்டதையடுத்து, விமானியின் சாதுர்யத்தினால், பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் Osage-லிருந்து பயணிகளை ஏற்றிச்சென்ற, ஆசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் போயிங்- 777, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது கடும் புயல் காற்று வீசியது. இதனையடுத்து வானில் அங்கும் இங்கும் சாய்ந்ததால், பயணிகளிடையே பெரும் பரபரப்பு நிலவியது. எனினும் விமானியின் சாதுர்யத்தால், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரையும் பத்திரமாக தரையிறக்கிய விமானியின் துரித நடவடிக்கைக்கு அனைவரும் பாரட்டுத் தெரிவித்தனர்.