சீனா மஞ்சள் பெருங்கடலில் நடைபெற்ற பிரம்மாண்ட கடற்படை ஒத்திகை - அதிநவீன போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன
Jul 27 2015 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனா மஞ்சள் பெருங்கடலில் பிரம்மாண்ட கடற்படை ஒத்திகையை நடத்தியது. இதில், அதிநவீன போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
சர்வதேச அளவில் பெருகிவரும் ராணுவ சவால்களை சமாளிக்க உலக நாடுகள் அவ்வப்போது போர் ஒத்திகையை நடத்தி வருகின்றன. இந்நிலையில், சீனா பிரம்மாண்ட கடற்படை ஒத்திகையை நடத்தியுள்ளது. அந்நாட்டின் வடக்கு பகுதியில் மஞ்சள் பெருங்கடலில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் அதிநவீன விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக தகவல் பரிமாற்றத்தை பரிசோதிக்கும் வகையில் இந்த ஒத்திகை அமைந்திருந்தது. எச்சரிக்கை சமிக்ஞைகளை தெரிவிக்கும் விமானங்கள், தாக்குதல் நடத்தும் விமானங்கள் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டது.