நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உருக்குலைந்த பகுதிகளை முழுமையாக சீரமைப்பதற்குள் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நில அதிர்வுகளால் மக்களை பீதி
Jun 30 2015 8:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், உருக்குலைந்த பகுதிகளை முழுமையாக சீரமைப்பதற்குள், அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நில அதிர்வுகள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில், தலைநகர் காத்மண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கட்டடங்கள், வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளுக்குள் சிக்கி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், கிழக்கு காத்மண்டுவிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Ramechhap மாவட்டத்தில், ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக நில அதிர்வு பதிவானது. இதனால், பொதுமக்கள் பெரும் பீதிக்கு ஆளாகினர். ஏப்ரல் மாத நிலநடுக்க பாதிப்பிற்குப் பின்னர் இதுவரை 334 முறை நிலஅதிர்வுகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.