இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அதிபர் செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் புகார் : அதிபர் முகமது முய்சுவை நீக்க நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு அழைப்பு
Jan 9 2024 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பரப்பியதைத் தொடர்ந்து மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சித் தலைவரான அலி அசிம் அழைப்பு விடுத்துள்ளார். மாலத்தீவு அதிபராக மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்சு பதவியேற்றதில் இருந்தே இந்தியாவுக்கு எதிராக அவர் செயல்பட்டு வருவதாக அலி அசிம் குற்றம்சாட்டியுள்ளார். அதன் ஒருபகுதியாகவே மாலத்தீவில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்று அவர் உத்தரவிட்டதாகக் கூறியுள்ள அலி அசிம், ஜனநாயகக் கட்சியினராகிய தாங்கள், நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்தவேண்டும் என்று நினைப்பதாகத் தெரிவித்தார்.