நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழா : இலங்கையில் களைகட்டிய பொங்கல் விழா கொண்டாட்டம்
Jan 8 2024 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையின் திரிகோணமலையில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடினர். தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் விழா வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில், தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதையொட்டி இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து திரிகோணமலையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.