பிரிக்ஸ் நாடுகளுக்கென தனி ரூபாயை உருவாக்க ஈரான் வலியுறுத்தல் : அமெரிக்க டாலர் மீதான மதிப்பு மேலும் சரியும் என எதிர்பார்ப்பு
Jan 8 2024 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு டாலருக்கு மாற்றாக பொதுவான ரூபாயை தேர்வு செய்ய ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட மேலும் 5 நாடுகள் சமீபத்தில் இணைந்தன. நீண்ட காலம் வரை கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலரில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, இந்திய ரூபாய் மற்றும் சீன யுவானை பெற்றுக்கொண்டு கச்சா எண்ணெயை ரஷ்யா விற்று வருகிறது. அடுத்ததாக சவுதி அரேபியாவும் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெயை விற்று வருகிறது. இதனால் டாலர் மீதான மதிப்பு குறைய தொடங்கியுள்ளது. தற்போது பிரிக்ஸ் கூட்டமைப்பு தங்களுக்கென ரூபாய் ஒன்றை உருவாக்க ஈரான் அழைப்பு விடுத்துள்ளதன் மூலம் டாலரின் மதிப்பு மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.