சிரியா அலெப்போ விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் : 6 மாதங்களில் 3 ஆவது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
Mar 22 2023 2:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவின் அலெப்போ சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாக சிரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் அலெப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் நடத்தும் மூன்றாவது ஏவுகணை தாக்குதல் இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியதரைக் கடலில் இருந்து இஸ்ரேல் பல ஏவுகணைகளை, கடலோர நகரமான லதாகியாவின் மேற்கே அதிகாலை 3:55 மணிக்கு ஏவியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வர்த்தகத்தில் முக்கியப்பங்கு வகிக்கும் அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதலில் அதன் ஓடுபாதை சேதமடைந்துள்ளதாக கூறியுள்ள சிரிய அரசு உயிர்சேதங்கள் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.