பாகிஸ்தானில் காவலர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 87 பேர் உயிரிழப்பு - படுகாயங்களுடன் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோருக்கு சிகிச்சை
Jan 31 2023 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் போலீசாரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்தியா தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. பெஷாவர் நகரில் காவலர் குடியிருப்புக்கு அருகில் உள்ள மசூதியில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மசூதியில் ஏராளமானோர் வழிபாடு செய்துகொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடந்ததால் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். காயங்களுடன் 150க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருபவர்கள் உயிரிழப்பது தொடரும் நிலையில், தற்போது வரை 92 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ட்டுள்ளது. இதற்கிடையே, மசூதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் மிகுந்த கவலை அளிப்பதாகவும், குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிப்பவர்களுக்க ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாவும் இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.